தமிழகம்

தீபாவளி பரிசாக வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட்.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது.

இதில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன.

இதனையடுத்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் எழுதினர். முதலில் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இரண்டு முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

இதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி மேலும் 480 இடங்களும், அக்டோபர் 9ஆம் தேதி 2 ஆயிரத்து 208 பணியிடங்களும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது. இதனால் தற்போது மொத்தம் 8 ஆயிரத்து 932 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மேலும், அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: வீட்டில எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே சூப்பரான ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!

ஆனால், மாத இறுதி ஆகியும் எந்தவொரு தகவலும் வரவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள தகவலின் படி, அக்டோபர் 30ஆம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.

Hariharasudhan R

Recent Posts

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

39 minutes ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

58 minutes ago

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

2 hours ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

2 hours ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

3 hours ago

“இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?

இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…

4 hours ago

This website uses cookies.