டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 2,206 பணியிடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வுகளின் கீழ் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் திட்டமும் வெளியிடப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி திட்ட அறிவிப்பில், 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜூன் 9ஆம் தேதி 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் சுமார் 15.8 லட்சம் பேர் தேர்வெழுதினர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வினை எழுதினர். இதனிடையே, கடந்த செப்டம்பரில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க: சங்கிகளை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. உதயநிதி போட்டோவை காலால் மிதித்த வீடியோ.. அவரே கொடுத்த பதிலடி!
இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூடுதல் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (அக்.9) வெளியான அறிவிப்பில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது.
இதன் காரணமாக, கட்-ஆஃப் மதிப்பெண் குறையுமா என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளதாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதேநேரம், இந்த முறை வனம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் கீழான பணியிடங்களும் இந்த குரூப் 4 மூலம் நிரப்பப்படுகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.