திருச்சி ; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் போட்டி தேர்வுகளுக்கான NR, IAS பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25ஆம் தேதி நடத்திய தேர்வினை எழுதிய மாணவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்தனர்.
அப்போது, அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25ஆம் தேதி நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் அத்தேர்வு எழுதினார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
பாரபட்சமாக நடத்தப்பட்ட அந்த தேர்வில் வழங்கப்பட்ட சிலரது விடைத்தாள் தொகுப்பில் ஏற்கனவே விடைகள் எழுதப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு நடத்தப்படவில்லை. மதியம் வழங்க வேண்டிய வினாத்தாள் சிலருக்கு காலையிலேயே வழங்கப்பட்டு அது திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால் மதிய தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது.
இதனால் சில மாணவர்கள் காலை தேர்வு முடிந்தவுடன் இடைவெளி நேரத்தில் மதிய தேர்வு விடைகளை படித்து விட்டு தேர்வு எழுதி உள்ளனர். சமத்துவமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும், வருடா வருடம் தேர்வு நடத்தி உடனுக்குடன் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். குரூப் 2 ஏ தேர்விற்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை தனித் தனியே நடத்த வேண்டும், என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய NR IAS அகாடமி இயக்குனர் விஜியாலயன் கூறியதாவது ;- விஏஓ தேர்வுகளை அரசு நடத்தி வந்த போது மாணவர்களுக்கு கூடுதலான ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது சமீபத்தில் குரூப்4ல் விஏஓ தேர்வை இணைத்தது மாணவர்களுக்கு ஒரு இழப்பு. அதேபோல் குரூப்2 ஏ தேர்வுகளை குரூப்2 நேர்முக தேர்வுகளோடு இணைத்தது மற்றொரு இழப்பு. ஆகவே, குரூப் 2 தேர்வில் இருந்து குரூப் 2 ஏ பணிகளை பழையபடி பிரித்திவிட்டாலும், குரூப்4 விஏஓ பணியில் இருந்து பிரித்துவிட்டால் இன்று இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளும், வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது, என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.