தமிழகம்

தனியார் பேருந்துகளை தத்தெடுத்த தமிழக அரசு.. விழுப்புரம் கோட்டத்தில் அவலம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.

விழுப்புரம்: தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், தொலைதூரப் பேருந்துகளான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் செமி ஸ்லீப்பர், ஸ்லீப்பர் வசதிகளுடன் குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.

இதைத் தவிர, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளை தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கோட்ட பேருந்துகள் இயக்கி வருகின்றன. மேலும், கிராமங்களுக்குள் டவுண் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வர்.

அவ்வாறு செல்லும்போது ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் முன்பதிவு செய்யப்படும் வகையிலான பேருந்துகளும், முன்பதிவில்லா பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறைக்காக சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் ஆயிரத்து 28 பேருந்துகள் சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் சென்றுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: நண்பர்களை காவு வாங்கிய கண்டெய்னர்.. இறப்பிலும் ஒன்றாக உயிரிழந்த சோகம்…!!

அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காக தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொண்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது போக்குவரத்தில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதாக உள்ளதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

22 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

16 hours ago

This website uses cookies.