விருதுநகர் ; ஸ்ரீவில்லிபுத்தூரில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டதால் போட்டி போட்டு பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். மேலும், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.
மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து, விலை உயர்ந்தால் பொதுமக்கள் பாதிப்பு அடையக்கூடாது என்ற நோக்கத்துடன், தமிழக அரசு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மூலம் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் தோட்டக்கலைத் துறை மூலம் உழவர் சந்தையில் குறைந்த விலையில் இன்று காலை தக்காளி விற்பனை துவங்கியது. முதற்கட்டமாக, விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
இன்றைய நிலையை பொறுத்தவரை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூபாய் 110க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் தக்காளி 70 ரூபாய்க்கும், சிறிய தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தினமும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.