முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களை பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி மாநாடு மிகக்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்தியாவில் எழுச்சிமிக்க மாநாடாக அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள்.
ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. ஜெயலலிதா எம்ஜிஆர் மதுரையை நேசித்தார்கள். அவர்கள் வாரிசான எடப்பாடி பழனிசாமியும் மதுரையை நேசிக்கிறார். அதிமுக மாநாட்டுக்கான பூமிபூஜை 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 கோடியே 65 லட்சம் பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் சேர பொதுமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதிமுகவின் எழுச்சி தொண்டர்களின் உண்ர்ச்சியை தெரிந்து கொள்ளுகிற மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும்.
சித்திரைத் திருவிழா போல அதிமுக மதுரையில் கடலை மக்களை பார்த்ததில்லை. கடலை அனைத்து குடும்ப அட்டைக்கும் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார்கள். எப்படி கொடுக்க போகிறார்கள் என தெரியவில்லை.
சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக திமுக அரசு செய்து வருகிறது. பொய்யை சொல்லி விளம்பரம் மட்டுமே நோக்கமாக கொண்டு முதல்வரும், அரசும் செயல்படுகிறது.
மக்களுக்கு தக்காளியே மறந்துபோகும் நிலை உள்ளது. ரசத்திலும் சாம்பாரிலும் தக்காளி போட முடியாத நிலை உள்ளது. பிடிஆரின் பதவி பறிக்கப்பட்டு எங்கோ மூலையில் உள்ளார். அவரை கண்டுபிடித்து தாருங்கள்.
பிச்சை என வாய்க்கொழுப்பாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். அதிமுகவின் உணர்வை புரிந்து கொண்டவர்கள் அதிமுகவில் உணர்வார்கள். அதிமுகவில் சாதி மத வித்தியாசம் இல்லை. இஸ்லாமியர் கூட அதிமுகவில் தலைமை தாங்குகிறார். திமுகவில் இதுபோல இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார் செல்லூர் ராஜு.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.