திண்டுக்கல் நகர் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் ( நாட்டு காய்கறிகள் இங்கிலீஷ் காய்கறிகள்) காய்கறிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதால் திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் வண்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மட்டும் பொதுமக்கள் காய்கறி விற்பனைக்கு வாங்கி செல்வது வழக்கம்.
இந்த காந்தி காய்கறி மார்க்கெட்டில் ஏ. எஸ். டி என்ற மொத்த தக்காளி வியாபார கடையை சந்தோஷ் என்பவர் 20 ஆண்டு காலங்களாக நடத்தி வருகிறார்.
தற்பொழுது ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் மழை காரணத்தினாலும் மற்றும் தமிழகத்தில் போதிய தக்காளிகள் இல்லாத காரணத்தினால் ஒரு மாத காலமாக தற்காலியின் விலை 120 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் சென்ற வாரம் சந்தோஷ் என்பவர் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 5 டன் தக்காளிகளை 60 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
ஆடி மாதம் என்றாலே நகைகளுக்கு தள்ளுபடி , துணிக்கடைகளில் தள்ளுபடி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். திண்டுக்கலில் முதல்முறையாக ஆடித்தள்ளுபடியாக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதே போல் இன்று தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் 8 டன் தக்காளிகளை மொத்த வியாபாரம் செய்யாமல் ஒரு நபருக்கு இரண்டு கிலோ வீதம் தக்காளிகளை ஆடி மாத தள்ளுபடியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்தார்.
மேலும் அவர் கூறுகையில் தக்காளி விலை சராசரியாக 50 ரூபாய்க்கு கீழ் குறைந்து விற்பனையாகும் வரை ஆடி மாதத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களுக்காக 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறோம் என்று கூறி உள்ளதால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் காலை 5 மணியிலிருந்து நீண்ட வரிசையில் நின்று தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.
தக்காளி விலை சராசரி நிலைக்கு வரும் வரை இந்த விற்பனையானது வாரம் ஒரு முறை விற்க்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர் .
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.