கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தியால் குத்திய இளைஞர்கள் தப்பியோடியது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மருந்துகடை வைத்து நடத்தி வருபவர் மோகன் குமார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் ஆட்டோவில் மோகன்குமாரின் மருந்து கடைக்கு வந்துள்ளனர்.வந்த மூவரும் மோகன் குமாரிடம் போதை ஏற்றும் மாத்திரைகள் வேண்டும் என கேட்டு உள்ளனர்.
அதற்கு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என்று மோகன்குமார் கூறியதால் ஆத்திரத்தில் மூவரில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் மோகன் குமாருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மூவரும் தப்பியோடியுள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து மோகன்குமார், சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் வழக்குப் பதிவு சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த மோகன் குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போதை மாத்திரை கேட்டு இளைஞர்கள் கத்தியால் மருந்து கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.