அண்ணாநகர்: நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் பிரபல நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் 17 வயது சிறுமி தப்பித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாள்.
அதன்படி, அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பிரபல நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி தனது அக்காவான 19 வயது பெண்ணுடன் வேலை செய்து வந்தாள்.
அப்போது, இருவரையும் சித்ரவதை செய்து வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் மீட்டு சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று காலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தை தொழிலாளர் நலவாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், இருவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பணி செய்த இடத்தில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை உள்ளிட்டவை நடந்ததா மேலும் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனரா, பணத்திற்காக விற்கப்பட்டனரா என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணை முடிவின் அடிப்படையில், நடிகை மும்தாஜ் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.