Categories: தமிழகம்

ரூ.1.50 லட்சத்துக்கு வட்டி ரூ.8 லட்சம்: கந்து வட்டியின் பிடியில் சிக்கிய நடுத்தர குடும்பம்…நீதி கேட்டு தூக்கு கயிறுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை: கந்து வட்டி கொடுமையை தீர்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் இருப்பதாக கூறி துக்கு கயிறுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பாட்டிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி அதற்காக மாதம் ரூ.1500 வட்டி கட்டி வந்தேன். இதுவரை ரூ.85 ஆயிரம் செலுத்தி உள்ளேன். தற்போது அந்த பத்திரத்திற்கு அவர் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளக் கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் இது குறித்து கேட்டோம். அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் எங்களது குடும்பத்தை திட்டி விரட்டிவிட்டார். இதுகுறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை மனு அளித்துள்ளோம். இந்த மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

13 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

14 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

14 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

14 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

15 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

16 hours ago

This website uses cookies.