விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி, சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு தற்போது சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்றுவிடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை உற்சாகமாக கண்டு களித்தனர். பின்னர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து பார்வையிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் மகர விளக்கு பூஜை நெருங்குவதால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், சூரிய உதயத்தை செல்போனில் படம்பிடித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். அதிகளவு கூட்டம் காணப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.