கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலியான உத்தரவு கொடுத்து திண்டுக்கலை சேர்ந்தவரிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் நித்தின் குமார். இவருக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த நவீன் (32), வெங்கடேசன் (34) ஆகிய 2 பேர் ரூ.7 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற இருவரும், நித்தின் குமாருக்கு போலியான உத்தரவு கொடுத்து ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நித்தின் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து நவீன், வெங்கடேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.