கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலியான உத்தரவு கொடுத்து திண்டுக்கலை சேர்ந்தவரிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் நித்தின் குமார். இவருக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த நவீன் (32), வெங்கடேசன் (34) ஆகிய 2 பேர் ரூ.7 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற இருவரும், நித்தின் குமாருக்கு போலியான உத்தரவு கொடுத்து ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நித்தின் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து நவீன், வெங்கடேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.