முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படக்கூடிய திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கோடை விடுமுறையின் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன் காரணமாக இன்று
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 06-ந் தேதி காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்துள்ளனர்.
தொடர்ந்து இன்று திருச்செந்தூர் வந்த அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவற்காக 51 குடங்களில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளனர்.
அப்போது கோவில் நிர்வாகத்தினர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கிரி பிரகாரத்தில் சுமந்து வந்த 51 பால் குடத்தையும் கொட்டி சென்றுள்ளனர்.
இதனால் கிரி பிரகாரம் முழுவதும் வழிந்தோடிய அபிஷேக பாலை பக்தர்கள் மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சுமார் 9- நாட்களாக 250- கிலோ மீட்டர்தூரம் பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தனி வரிசை இருந்தபோதிலும் அதை கோவில் நிர்வாகம் முறையாக கடைப்பிடிக்காமல் பாதையாத்திராக வந்த பக்தர்களின் வேண்டுதல்களை அலட்சியப்படுத்தி உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் மீது அரசுரையும் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.