முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படக்கூடிய திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கோடை விடுமுறையின் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன் காரணமாக இன்று
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 06-ந் தேதி காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்துள்ளனர்.
தொடர்ந்து இன்று திருச்செந்தூர் வந்த அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவற்காக 51 குடங்களில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளனர்.
அப்போது கோவில் நிர்வாகத்தினர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கிரி பிரகாரத்தில் சுமந்து வந்த 51 பால் குடத்தையும் கொட்டி சென்றுள்ளனர்.
இதனால் கிரி பிரகாரம் முழுவதும் வழிந்தோடிய அபிஷேக பாலை பக்தர்கள் மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சுமார் 9- நாட்களாக 250- கிலோ மீட்டர்தூரம் பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தனி வரிசை இருந்தபோதிலும் அதை கோவில் நிர்வாகம் முறையாக கடைப்பிடிக்காமல் பாதையாத்திராக வந்த பக்தர்களின் வேண்டுதல்களை அலட்சியப்படுத்தி உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் மீது அரசுரையும் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.