திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் காவல் நிலையம் அருகே ஊர்க்காவல் படை காவலர் வீர சின்னன் காவல்துறை வாகனத்தை நோக்கி வந்துள்ளார். அவருக்கு முன்புறமாக ராஜேஸ்வரி என்பவர் தனது எட்டு வயது மகளை அரசு பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக காவல் வாகனம் மோதியதில் திவ்யதர்ஷினி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் திவ்ய தர்ஷினி மீது காவல்துறையினர் வாகனம் மோதியுள்ளது .
இதில் சம்பவ இடத்திலேயே திவ்யதர்ஷினி உயிரிழந்தார். உடன் வந்த தாயார் ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் காவல்துறை வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த காவலர் வீர சின்னன் ஆகியோரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துனை ஆணையர் வனிதா உள்ளிட்ட காவலர்கள் விபத்தை ஏற்படுத்திய காவலரை மீட்டு சாலை ஓரமாக அமர வைத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவலர் வாகனம் மோதியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.