உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ப பு.மாம்பாக்கம் கிராமம் . இந்த கிராமத்தை சேர்ந்த வேலு என்பருடைய மகன் சூர்யா (20 ) என்ற வாலிபர் ஒரு இருசக்கர வாகனத்தில் பு. மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டையில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
அப்போது மேம்பாலத்தின் மேலே இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் சூர்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தினால் ரயில்வே மேம்பாலத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.