புதுச்சேரி : புதுச்சேரியில் ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இளைஞர் தவறி விழுந்து உயிரிழிந்ததை அடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (50). இவர் சிதம்பரம் கோயில் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜீவானந்தம் (20), விழுப்புரத்தில் உறவினர் வீட்டில் தங்கி தனியார் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவானந்தம் சிதம்பரத்தில் உள்ள தனது தந்தை சந்தித்து விட்டு நேற்று அங்கிருந்து விழுப்புரம் செல்வதாக கூறிவிட்டு புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் ஒருவரை சந்திக்க வந்துள்ளார்.
அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதியில் மாலை மீன் பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஜீவானத்தை மீட்டு தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து இது குறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஜீவானந்தம் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.