மதுரை : சரக்கு ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மற்ற ரயில்கள் தாமதமாக புறப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
வேளாண்மைக்குப் பயன்படும் டிராக்டர் வண்டிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்று மதுரை கூடல்நகரில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த ரயிலின் கடைசி சரக்குப் பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் திடீரென தடம் புரண்டு செல்லூர் அருகே ரயில் பாதையைவிட்டு இறங்கியது.
இதன் காரணமாக மதுரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற குருவாயூர்-சென்னை விரைவு ரயில் மதுரை தத்தனேரி வைகை பாலத்தில் நிறுத்தப்பட்டது.
பிறகு அந்த ரயில் மீண்டும் மதுரை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பிற்பகல் மேல் மீண்டும் ரயில் புறப்பட்டது.
இந்நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டியைச் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.