Categories: தமிழகம்

அறையில் இருந்து அலறி ஓடி வந்த பயிற்சி மாணவி : மருத்துவர் கொடுத்த பாலியல் டார்ச்சர்… அரசு மருத்துவமனையில் ஷாக்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர் இரண்டு மாத பயிற்சிக்காக குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருபவர் எஸ்.பாபு . அரசு மருத்துவர் பாபு நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சடைந்த அந்த மாணவி கூச்சலிட்டவாரே அறையில் இருந்து வெளியே ஓடி வந்து இது குறித்து அங்கு பணியாற்றிய வரும் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியுடன் வந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் பாபு மீது புகார் அளித்தனர்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் பாபு மீது நான்கு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தலைமறைவான அரசு மருத்துவர் பாபுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியிலும் செவிலியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

4 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

4 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

5 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

6 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

7 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

10 hours ago

This website uses cookies.