நாமக்கல்லில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் செவிலியர்கள் கேட்கும் இடங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தை பெறுத்தவரை 76 செவிலியர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த பணியிடமாற்றத்துக்கு செவிலியர்களிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதாவது புதிய பணி இடத்துக்கு செல்ல தற்போது வேலை செய்யும் இடத்தில் இருந்து முறைப்படி விடுபட வேண்டும். ஆனால் லஞ்சம் வழங்காத செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பணியில் இருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையை சுகாதாரத்துறை அதிகாரிகள் கையில் வாங்காமல், கூகுள்பே மூலம் பெற்றதாக புகார் எழுந்தது.
இப்படி லஞ்சம் கொடுத்தவர்களை பணியில் இருந்து விடுவித்த நிலையில் தாமதம் செய்வதர்களை விடுவிக்காமல் இருந்தததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கூகுள்பே மூலம் செவிலியர்களிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி, மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.