தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 49 வயதான திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2002 முதல் 20 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் கங்கா, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினராக பதவிவகித்தார். மேலும், தற்போது தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராக இருந்து, 50 பேர்கொண்ட கலைக்குழுவையும் நடத்திவருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்குத் தனது சொந்தச் செலவில் மளிகைப் பொருள்கள், வேட்டி, சேலைகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நான் தேர்தலில் வென்றால் எனது வட்டத்திலுள்ள அனைத்துத் தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன், மக்கள்நலப் பணித் திட்டங்களைக் கொண்டுவந்து திறம்படச் செயலாற்றுவேன்” என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். சொல்லி பெற்ற வெற்றியால் பொதுமக்கள் திருநங்கை கங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.