திருப்பூர் – பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், இசக்கி பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டியன், நேற்று வியாபாரம் முடித்து விட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தள்ளு வண்டியோடு வீடு திரும்பும் போது, திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இசக்கி பாண்டியன் பணம் இல்லை என கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் இரவு 12 மணி அளவில் இசக்கிபாண்டியன் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த பாண்டியன் குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர். மேலும் பாண்டியனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
திருநங்கைகள் பாண்டியன் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்த பாண்டியன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து பல்லடம் காவல்துறையினர் இரு தரப்பினர் இடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கைகள் பாண்டியனை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.