வேலூர் : காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகில் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்களின் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றது.
அதனை தடுக்கும் வகையில் இன்று வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன்,சீனிவாசன், தலைமை காவலர் சாந்தி, காவலர் மதன், போலீசார் கொண்ட குழுவினர் இன்று காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.