செங்கல்பட்டு : அரசு பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பள்ளி மாணவர் ஒருவர் கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை நேரம் அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். ஒரு சில பகுதிகளில் குறைந்த பேருந்துகளே இயக்கப்படுவதால் வேலை செல்பவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என பேருந்து கூட்டமாக செல்வதை காணமுடிகிறது.
ஒரு சில பகுதிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்துள்ளனர்.
அப்போது படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நல்வாய்ப்பாக அந்த மாணவனுக்கு சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் அஜாக்கிரதையாக பயணம் மேற்கொள்வதாகவும், பேருந்துகள் குறைந்த அளவே உள்ளதால் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுவதாக நெட்டிசன்கள் பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.