Categories: தமிழகம்

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை : அடுத்தடுத்து புகாரில் சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்!!

குன்னத்தூரில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்த
தனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செங்கப்பள்ளி ரோட்டில் சுமதி தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு போன்றவை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.


மேலும் அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவம் பார்க்கப் பட்ட பெண் ஒருவர் இறந்ததாகவும் புகார் வந்தது. இதன் பேரில் அதிகாரிகள் சுமதி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல், மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனிடம் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் மீண்டும் சுமதி மருத்துவமனையில் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது மீண்டும் மகப்பேறு டாக்டர் நியமிக்கப்படாமல், டாக்டர் விஸ்வநாதன் மகப்பேறு சிகிச்சைகள் மற்றும் கருக்கலைப்பு மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இயங்கி வந்த பிரசவ பகுதி மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

விஸ்வநாதனின் மருத்துவ கல்வி தகுதிக்கு ஏற்ப அவர் பொது சிகிச்சை மட்டும் அளிக்க அறிவிக்கப்பட்டது. மேலும் இனி வருகிற காலத்தில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் நியமித்து அவர்கள் தொடர்பான சிகிச்சைகள் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சுமதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…

2 minutes ago

75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!

நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…

24 minutes ago

அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த படம்னு தெரியுமா!

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…

55 minutes ago

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

2 hours ago

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

3 hours ago

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

13 hours ago

This website uses cookies.