Categories: தமிழகம்

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை… சிக்கிய தனியார் மருத்துவமனை : போலீஸ் குவிந்ததால் பரபரப்பு!!

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக பிரபல தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் நேரு நகர் பகுதியில் தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரியசாமி தனது மனைவி ராதாவோடு வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ராதாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பின் உறவினர்கள் வார்டில் சென்று பார்த்த போது உடல் அசைவில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அங்குள்ள நர்சிடம் கேட்ட போது மயக்க நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்பு ராதாவின் உடலை பெற்று கொண்டனர்.

உயிரிழந்த ராதாவின் உறவினர்கள் கூறுகையில், காலையில் ஐசியு வார்டில் பார்த்த போது உடல் குளிந்த நிலையில் இருந்தது மூக்கில் ரத்தம் வழிந்தது. இது பற்றி கேட்டதற்கு மயக்க நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

காலையிலேயே இறந்து விட்டார். அதை தெரிவிக்காமல் மாலை வரை வைத்துள்ளனர். டாக்டரிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜோசப்ராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர், ராதா காலை மருத்துவமனைக்கு வரும் போது உடல் நிலை மோசமாக இருந்தது. அது குறித்து உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஒரு சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்து இறந்தவரின் உறவினர்கள் கூறும் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார்.

நகரில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் இறந்ததை அறிவிக்காமல் ரமணா பட பாணியில் சிகிச்சை அளித்துள்ளதாக உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டது தனியார் மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

2 days ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.