Categories: தமிழகம்

“மரம் சார்ந்த விவசாயமே ஒரே வழி” : காவிரி நீர் பிரச்சனை குறித்து சத்குரு கருத்து!!

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு அவர்கள் “காவேரி தாய்க்கு நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது, ஆனால் கோடைக்காலத்தில் குறைந்து போதல் மற்றும் வறண்டு போவதால் அவதியுறுகிறாள். 83000 சதுர கிமீ பரப்பு கொண்ட காவேரி வடிநிலப் பகுதியில் பெரிய அளவில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் தாவரங்களை வளர்ப்பது மட்டுமே காவேரி வருடத்தில் 12 மாதங்களும் மிகுதியாக பாய ஒரே வழி. வறண்டு கிடக்கும் தண்ணீருக்காக போராடுவதை விட காவேரி தாயை வலுப்படுத்தி மேம்படுத்துவோம். ஞானம் மேம்படட்டும்.” என்று கூறியுள்ளார்.

மரம் சார்ந்த விவசாயம் என்பது, மரங்களுக்கு இடையே பயிர் செய்வதும், வரப்பு ஓரங்களில் மரங்களை பயிரிடும் முறை ஆகும். குறிப்பாக டிம்பர் மரங்களை அதிக அளவில் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பலன்களோடு, விவசாயிகளுக்கு பொருளாதார பலன்களையும் இம்முறை அள்ளித் தரும்.

விவசாய நிலங்களில் அதிக அளவில் மரங்களை நடுவதன் மூலம் மண்ணின் தரமும், மண்ணின் நீர்பிடிக்கும் திறனும் மேம்படுகிறது. இதன் மூலம் மழைப் பொழிவு காலங்களில் அதிக படியான நீரினை பூமிக்குள் சேமிக்க முடியும். இதனை காவேரி வடிநிலப் பகுதியாக சொல்லப்படும் 83000 சதுர கிமீ பரப்பளவில் முறையாக செயல்படுத்தப்படும் போது, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சிற்றோடைகளும், கிளை நதிகளும் புத்துயிர் பெற்று காவேரி ஆறு வற்றாமல் ஜீவ நதியாக ஆண்டு முழுவதும் பாயும்.

இதனை வலியுறுத்தியே காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு அவர்கள் துவங்கினார். இவ்வியக்கம் தமிழக – கர்நாடக மாநிலங்களில் இருக்கும் காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் பரவலாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சி வகுப்புகள், மானிய விலையில் மரக்கன்றுகள் வினியோகம் என பல்வேறு செயல்களை செய்து வருகிறது.

மேலும் இவ்வியக்கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தோராயமாக 4.85 கோடி மரக் கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.