#மிதக்குது_சென்னை… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் : உதவிக்கு மாநகராட்சி அறிவித்துள்ள இலவச எண்கள்!!!
கனமழையால் சென்னை முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், அதில் 68 இடங்களில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய 77 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
அந்தவகையில், மழை தொடர்ந்து பெய்து வந்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் நிலையில், அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும் தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளதாகவும், 40 மோட்டார்கள் இப்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை நேற்றிரவு அறிவித்திருந்தது சென்னை மாநகராட்சி. அதேபோல. 044 25619204, 044 25619206, 044 25619207, ஆகிய எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இப்போது மேலும் கூடுதலான இலவச உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், +91 94454 7720 என்ற வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டிருக்கிறது.. இந்த எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம் என்றும் மாநகராட்சி நிர்வாகம், சென்னைவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.
இதேபோல், சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றும், புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.
அதே போல சென்னை முழுவதும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை தேங்கியுள்ளதால் ட்விட்டரில் சென்னை வாசிகள் #மிதக்குது_சென்னை என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.