தமிழகம்

’நீ வந்து ப** பிரச்னை முடிஞ்சிடும்’.. பழங்குடியினப் பெண்ணுக்கு திமுக கவுன்சிலர் ஆபாச மிரட்டல்? மதுரையில் திடுக்!

மதுரையில், பழங்குடியினப் பெண்ணுக்கு திமுக கவுன்சிலர் ஆபாச மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டி உள்ளார்.

மதுரை: மதுரை, மீனாட்சி தெருவில் பழங்குடியின தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது வீட்டின் அருகில் போட்டிருக்கும் தண்ணீர் குழாய் தொட்டியை மூட வேண்டும் என்று திமுக கவுன்சிலர் மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இது தொடர்பாக ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் 6 தலைமுறைகளாக இதே பகுதியில் இருக்கிறோம். எனது மாமனாரின் தாத்தா அளித்த இடம், அதாவது எங்களது பூர்வீக இடத்தில் கோயில் ஒன்று உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள எங்களது வீட்டின் முன் தண்ணீர் குழாய் தொட்டி அமைத்து, அதனை பாதுகாப்பான முறையில் பராமரித்து வருகிறோம்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் 67வது வார்டு கவுன்சிலர் (திமுக) நாகநாதன் என்பவர், இந்த தண்ணீர் குழாயை மூட வேண்டும் என தொடர்ந்து மிரட்டுகிறார். இது தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக மூன்று பேர் வந்து சொல்லிவிட்டுச் செல்வர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த கவுன்சிலர் உள்பட 3 பேர் மீண்டும் வந்தனர்.

அப்போது, எனது கணவர் எங்கே என்று தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர், காட்டுக்குள் இருக்க வேண்டிய நீங்கள் ஊருக்குள் இருக்கக்கூடாது, உங்களை எப்படியாவது இங்கு இருந்து துரத்தி விடுவேன் என மிரட்டினார். இந்த தண்ணீர் தொட்டியால் உங்களுக்கு என்ன பிரச்னை, என்ன செய்தால் பிரச்னை செய்யாமல் இருப்பீர்கள் எனக் கேட்டேன்.

இதையும் படிங்க: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. சங்கரன்கோவிலில் பரபரப்பு!

அதற்கு, என்னோடு வா, என் கூட ஒருமுறை படு, அப்படி நீ செய்தால் உடனடியாக பிரச்னை தீர்ந்துவிடும் என ஆபாசமாக மிரட்டி விட்டு, நாளை காலை வருவேன், உன் முடிவைச் சொல்லு எனச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், எதற்காக இப்படிச் செய்கிறார் என்பது இதுவரை எங்களுக்கும் தெரியவில்லை, தினமும் வருகிற 3 பேருக்கும் தெரியவில்லை.

இதுவரை இந்தச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் மூலம் ஆன்லைனில் புகார் அளித்து இருக்கிறோம். இதுநாள் வரை எங்களை காவல் நிலையத்தில் இருந்து அழைக்கவில்லை” எனத் தெரிவித்தார். பின்னர், இது குறித்து வார்டு கவுன்சிலர் ஊடகத்திடம் பேசியுள்ளார்.

அப்போது அவர், “நீங்கள் சொல்லும் நபர் யார் என்றே எனக்கு தெரியாது. அந்தப் பகுதியில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவ்வாறு நான் நடந்து கொண்டதற்கான ஆடியோ, வீடியோக்களைக் கொடுங்கள், முதலில் அவர்களை அந்த வேலையை முடித்துக் கொடுக்கச் சொல்லுங்கள், நான் AE-யிடம் பேசுகிறேன்” என்றார். இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

10 minutes ago

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…

50 minutes ago

அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…

1 hour ago

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…

2 hours ago

19 மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன? படியும் ரத்தக்கறை.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…

3 hours ago

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…

4 hours ago

This website uses cookies.