இல்லம் தேடி கல்வி நிறுத்தக்கூடாது மாவட்ட ஆட்சியரகத்தில் குவிந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!
கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை முதல் மூன்று ஆண்டு நிறைவடைகிறது.
இல்லம் தேடி கல்வியை தமிழக அரசு, நிறுத்தக்கூடாது. தமிழகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளோம், ஏராளமான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவை ஆற்றி வருகிறோம். ஏராளமான கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதற்கு இல்லம் தேடி கல்வி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5000 தன்னார்வலர்கள் கல்வி சேவை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க பல்வேறு வகையில் ஆர்வம் காட்டி வருகிறோம். பெற்றோர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வியை கொடுக்க முன்வர வேண்டும், என எங்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இல்லம் தேடி கல்வியை நிறுத்துவதாக கூறப்படுகிறது.
இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5000 பேர் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் நிலையில் இதில் 500 பேர் மட்டும் தேர்ந்தெடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் தன்னார்வலர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்மாரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உங்களது கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையிடம் நிச்சயம் கொண்டு செல்கிறேன் என்று உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.