திருச்சி மாவட்டம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினரர் சடலமாக மீட்டனர்!
திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூடஸ் என்பவரது மகன் சாம் ரோஷன் இவருக்கு வயது 15 அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணை பகுதியில் குளிக்க தனது சக நண்பர்களுடன் வந்தபோது நீரில் மூழ்கி மாயமானார்.
நேற்று மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 6:30 மணி வரை சிறுவனை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். பிறகு இரவு நேரம் சூழ ஆரம்பித்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் காலை முதல் ட்ரோன் கேமரா மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனை தேடி வந்தனர்.திருச்சி கன்டோன்மென்ட் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர்,பெரம்பலூரிலிருந்து ஸ்கூபா டைவிங் தெரிந்த தீயணைப்புத் துறையினர் என 30 பேர் சிறுவனை தேடும் பணியின் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைக் கண்ட சிறுவனின் பெற்றோர்கள் கதறித் துடித்தனர். மேலும் அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது இதுபோல சிறுவர்கள் யாரும் பெரியவர்களின் துணை இல்லாமல் எங்கும் குளிக்க செல்லாதீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.