திருச்சி : திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, அண்மையில் நடந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடப்படாமல் போனது.
மேலும், பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என தற்காலிக அவைத் தலைவர் அறிவித்தையடுத்து பொதுக்குழு எந்தவித தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த பன்னீர்செல்வம், அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அலுவலகத்தில் முன் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் இருந்த ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. மேலும், அலுவலகத்தின் உள்ளே சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் படமும் கிழிக்கப்பட்டு இருந்தது.
திருச்சியை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பெரும்பாலான அதிமுகவினர் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.