திருச்சி : காவிரி குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீர் மூழ்கி மாயமான நிலையில், சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருச்சி மதுரை ரோடு ஜீவா நகர் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மகேஷ்குமார். இவர் மரக்கடையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை மேலசிந்தாமணி அருகே உள்ள காந்தி படித்துறையில் குளிக்க சென்ற போது, தண்ணீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த கோட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த மாணவரின் உடல் திருச்சி அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்றுப்பகுதியில் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.