திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்ததற்கான சான்றிதழை மேயர், ஆணையர் பெற்றுக்கொண்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மைக்கான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மை நகரங்களில் மேயர் மற்றும் ஆணையரை அழைத்து பரிசுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் பட்டியலை வெளியிட்டது. அதில், தேசிய அளவில் திருச்சி 112வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தது.
திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்தாதாக தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இதற்கான சான்றிதழை மாநகராட்சியில் மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல, தேசிய அளவில் தூத்துக்குடி 179வது இடத்தையும், கோவை 182வது இடத்தையும், சென்னை 199வது இடத்தையும் பிடித்துள்ளன.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.