திருச்சி ; திருச்சியில் 13வதுமாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள SIS அப்பாட்மெண்டில் 13வது மாடியில் குடியிருந்து வருபவர் பிரேம்குமார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சௌமியா. இவர் காவேரி கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ரியா (11), சிவியா(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பேராசிரியர் சௌமியா கல்லூரியில் மாணவிகளுக்கு சுயதொழில் குறித்த தன்னம்பிக்கை குறித்தும், முன்னேற்ற பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று திடீரென 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த எடமலைபட்டிபுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக சௌமியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏது காரணம் உண்டா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் கணவர் பிரேம்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பேராசிரியர் எப்படி இந்த முடிவு எடுத்தார் என பேராசிரியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.