திருச்சி : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற ரெங்கராஜன் நரசிம்மனை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜன் நரசிம்மன். இவர், ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் பல்வேறு விதிமீறல்கள், ஊழல்கள் குறித்து அறநிலையத் துறையினருக்கு புகார் அளித்தும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடுத்து வருகிறார்.
மேலும், இவர் மீது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக சென்ற போது, அங்கு அவரது வழக்குரைஞர் சீனிவாசனை சந்தித்துள்ளார். அப்போது, இருவருக்கும் வழக்கு தொடர்பாக கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ரெங்கராஜ நரசிம்மன் வழக்கறிஞர் சீனிவாசனை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சீனிவாசன் உடனிருந்த அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் இரண்டு பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக ரெங்கராஜன் நரசிம்மன் ஜூடிசியல் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளிடம் தன்னை தாக்க வருவதாக தெரிவித்தார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு இருந்து அவரை பத்திரமாக வெளியே அனுப்பினர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ரெங்கராஜன் தொலைபேசியில் தொடர்பு சொல்ல முயற்சித்த போது அவர் அழைப்பை எடுக்கவில்லை.
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
This website uses cookies.