திருச்சி மாவட்ட எஸ்பியாக பொறுப்பு வகிப்பவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆக பதவி வகித்து வருகிறார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராக இணையதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தானும் தனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ் பி அருண்குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்ப நபராக குழந்தைகள் பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் தளத்தில் இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ்ஸும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்திலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. கொடூர எண்ணமும் கொண்டவர்கள்தான் இதற்காக அவமானப்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் X தளத்தில் ஆபாசமாக, அவதூறு பரப்பியவர்களின் கணக்கை வெளியிட்ட திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் அனைவரும் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.