திருச்சியில் குடி போதை தகராறில் கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூரை சேர்ந்தவர் குணசேகர் (55). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவி, விஜயகுமார், தர்மா என்ற இரு மகனும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் தனியாக வசித்து வந்தார். குணசேகர் குடிப்பழக்கம் காரணத்தால் அதிக அளவில் மது குடித்துவிட்டு சாலை ஒரத்தில் உறங்கி விடுவார்.
இந்த நிலையில், நேற்றிரவு குணசேகர் உறையூர் அடுத்துள்ள ராமலிங்க நகர் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு கைகலப்பாக மாறியதன் காரணத்தால், மது குடித்தவர்கள் குணசேகரனை அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் குணசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த குறித்து தகவல் அறிந்த உறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.