திருச்சி ;திருச்சியில் சிறப்பு முகாம் உள்ள சிறைவாசிகள் நேற்று இரவு சுவர் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாம் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் மற்றும் இலங்கை தமிழர் சுமார் 100 பேரும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கு இருந்தவர்கள் பயன்படுத்திய 155 செல்போன்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் திரும்ப வழங்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகாமில் சிலர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு திடீரென மயங்கினர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் இலங்கை தமிழர்கள் திடீரென முகாம் சுவரின் மீது ஏறி வழக்கு முடிந்து ஓரிரு நாட்களில் சொந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறோம். எனவே, எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை, ஒப்படைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உதவி ஆணையர் காமராஜ் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கீழே இறங்கினார்கள். இச்சம்பவத்தால் சிறப்பு முகாம் வளாகத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய சிறை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.