திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் பகுதியில் திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல்நிலைய ஆய்வாளர் வீரமணி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்பொழுது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் 21 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் மதன் என்கிற மதுபாலன் (29) என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இரண்டு லட்சம் மதிப்புடைய 21 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதுபாலன் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.