திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். வருடம் தோறும் திருச்சி சிந்தாமணி உள்ள அண்ணா சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த வருடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.