திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். வருடம் தோறும் திருச்சி சிந்தாமணி உள்ள அண்ணா சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த வருடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.