வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போலீஸாருக்கு ‘ஷாக்’.. சதி செயல் முறியடிப்பு… திருச்சி போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 8:28 pm

திருச்சி ; திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களுடன் 5 கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முழுவதும் காவல் துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 5 பேரிடம் விசாரணை செய்த பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். அதில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட இருந்ததை கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தில் பறிமுதல் செய்தவுடன் அவர்களை 5 பேரை கைது செய்தனர். 5 பேர் யாருக்காக கூலிப்படையாக செயல்படுகிறார்கள். மேலும், ஆயுதங்களை எதற்காக எடுத்துச் சென்றார்கள்..? என்ன சதி செயலில் ஈடுபட
சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ