திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் மடத்தின் சொத்துக்களை அபகரிக்க சிலர் முயற்சி? கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 6வது ஜீயர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயர் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடம் அமைந்துள்ளதே. இம்மடம் 300 வருடங்கள் பழமையானதாகும்.
இந்த மடத்திற்கு ஶ்ரீரங்கம் உள்பட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 500 கோடிக்கும் மேல் அசையா சொத்துக்கள் உள்ளது. இந்த இடங்களில் பலர் குறைவான குத்தகை தொகை அடிப்படையில் வசித்து வருகிறார்கள். மேலும் 2010 ஆம் ஆண்டு 80 வயதுடைய முதியவர் ஜீயராக இருந்தார்.
அப்போது உள்ளூரில் ரியல் எஸ்டேட் செய்யும் சிலர் தொடர்ந்து ஜீயருக்கு பல இன்னல்களை கொடுத்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த மடம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 6வது ஜீயராக ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயரை நியமனம் செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் இந்த மடத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பெறப்படும் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து வந்தார். இந்த மடத்தின் பெயர் பலஹாரி சீனிவாச பெருமாள் மடம், ஆனால் இந்த மடத்தின் பெயரில் சிறிய மாற்றம் செய்து புதிதாக டிரஸ்ட் தொடங்கி மடத்திற்கு சொந்தமான இடங்களை பத்திரப்பதிவு செய்து கோடிக்கணக்கான ரூபாயை சிலர் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த மடத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்பதிவு செய்து தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆகையால் இந்த நபர்கள் மீதும் காவல்துறை தரப்பில் முறையான வழக்குகள் பதிவு செய்து 60 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க வேண்டும். மேலும் இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.