திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் மடத்தின் சொத்துக்களை அபகரிக்க சிலர் முயற்சி? கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 6வது ஜீயர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயர் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடம் அமைந்துள்ளதே. இம்மடம் 300 வருடங்கள் பழமையானதாகும்.
இந்த மடத்திற்கு ஶ்ரீரங்கம் உள்பட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 500 கோடிக்கும் மேல் அசையா சொத்துக்கள் உள்ளது. இந்த இடங்களில் பலர் குறைவான குத்தகை தொகை அடிப்படையில் வசித்து வருகிறார்கள். மேலும் 2010 ஆம் ஆண்டு 80 வயதுடைய முதியவர் ஜீயராக இருந்தார்.
அப்போது உள்ளூரில் ரியல் எஸ்டேட் செய்யும் சிலர் தொடர்ந்து ஜீயருக்கு பல இன்னல்களை கொடுத்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த மடம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 6வது ஜீயராக ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயரை நியமனம் செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் இந்த மடத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பெறப்படும் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து வந்தார். இந்த மடத்தின் பெயர் பலஹாரி சீனிவாச பெருமாள் மடம், ஆனால் இந்த மடத்தின் பெயரில் சிறிய மாற்றம் செய்து புதிதாக டிரஸ்ட் தொடங்கி மடத்திற்கு சொந்தமான இடங்களை பத்திரப்பதிவு செய்து கோடிக்கணக்கான ரூபாயை சிலர் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த மடத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்பதிவு செய்து தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆகையால் இந்த நபர்கள் மீதும் காவல்துறை தரப்பில் முறையான வழக்குகள் பதிவு செய்து 60 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க வேண்டும். மேலும் இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.