Categories: தமிழகம்

முன்பே எச்சரித்தும் இந்து அறநிலையத்துறை அலட்சியம் ; ஸ்ரீரங்கம் கோவில் சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்!!

திருச்சி ; திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்குப் பகுதி கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் 21 பெரிய கோபுரங்கள் உள்ளது. ஒவ்வொரு கோபுரங்களிலும் ஒரு சிறப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது
பிற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதரை தரிசனம் செய்து கோபுரங்களையும் வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தில் உள்ள நிலைகளில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு கீழே விழும் அபாயம் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக உடனடியாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.50 மணி அளவில் கிழக்கு கோபுரம் இரண்டாவது அடுக்கு சுவர் விரிந்து விழுந்தது.

விரிசல் விழுந்த புனரமைக்கக் கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கோயில் நிர்வாகத்தையும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் போஜராஜன் தலைமையில் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக கூறினர். ஆனால் இணை ஆணையரை பார்த்து விட்டு தான் செல்வோம் என தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் இணைய ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் மனோஜ்குமார், சுரேஷ்பாபு மாவட்ட செயலாளர், மணிகண்டன் திருச்சி மாநகர மாவட்ட பேச்சாளர், ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஹிந்து முன்னணி அமைப்புனரின் போராட்டத்தால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 67 லட்ச ரூபாய்டெண்டர் கோரப்பட்டது. ஆனால் டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோபுரம் முழுவதுமாக புனரமைப்பு பணியை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

பணியை மேற்கொள்வதற்காக தற்போது சாரம் கட்டும் பணியும் தொடங்கியுள்ளது. இன்று தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

9 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

9 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

10 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

10 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

11 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

11 hours ago

This website uses cookies.