திருச்சி அருகே ரயில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி – உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (18). இவா் திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். தினம்தோறும் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு ரயில் வந்து செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை கல்லூரிக்கு வந்துவிட்டு மாலை மீண்டும் மணப்பாறைக்கு ரயிலின் கதவின் அருகே நின்ற சென்று கொண்டிருந்தார்.
ரயில் திருச்சி மாவட்டம் அடுத்துள்ள பெரிய ஆலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அஸ்வின்சா்மா நிலை தடுமாறி ரயிலிருந்து கீழே விழுந்தாா். இதனைக் கண்ட சகபயணிகள் உடனடியாக ரயிலின் அவசர நிறுத்த சங்கிலியை இழுத்துனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக அவரை காவல் துறையினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வின்சா்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.