கோவை: கோவை அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை சுந்தராபுரத்திலிருந்து தேனி செல்வதற்காக புது மண தம்பதிகள் ஷாம்பிரசாத் (28), அவரது மனைவி சுவாதி (24), ஷாம் பிரசாத்தின் தாயார் மஞ்சுளா, தந்தை சௌடையன் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் ஈச்சனாரி மேம்பாலத்தின் மேல் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஷாம்பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுவாதி மஞ்சுளா சௌடையன் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மஞ்சுளா சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது சுவாதி மற்றும் சவுடையனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.