Categories: தமிழகம்

இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து : இளைஞர்கள் உட்பட 3 பேர் பலி.. திருமண நிகழ்வுக்கு சென்ற போது சோகம்!!

விழுப்புரம் : இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் ரங்கநாதன். இவர் சென்னை புரசைவாக்கத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

இதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ரமேஷ் . இவர் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியில் துணி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் திண்டிவனம் அடுத்த இரட்டணையில் நடைபெறுகின்ற திருமண நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் திண்டிவனம் அடுத்த கொள்ளார் அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் மீது லாரி மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

இதே போன்று வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் அடுத்த இளங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் இந்த விபத்தில் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

25 minutes ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

2 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

3 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

4 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

5 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.