விழுப்புரம் : இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் ரங்கநாதன். இவர் சென்னை புரசைவாக்கத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.
இதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ரமேஷ் . இவர் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியில் துணி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் திண்டிவனம் அடுத்த இரட்டணையில் நடைபெறுகின்ற திருமண நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் திண்டிவனம் அடுத்த கொள்ளார் அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் மீது லாரி மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
இதே போன்று வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் அடுத்த இளங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் இந்த விபத்தில் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
This website uses cookies.