புழலில் தனியார் குடோனில் பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற சுமார் 50 டன் ரேஷன் அரிசி மூட்டை மூன்று லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை அடுத்த புழலில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி ஆபாஷ்குமாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராம்நகர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு, ஆந்திராவிற்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது.
மேலும், குடோன் முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திராவிற்கு கடத்துவதற்காக பதுக்கிய சுமார் 50 டன் ரேஷன் அரிசி மற்றும் 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக ஜோஷ்வா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.