கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 750-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கேரள இளைஞரை கைது செய்தனர்.
கோவை காந்திபார்க் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவுக்கு கடத்த ரேசன் அரிசி சேகரிப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் இன்று காலை 6 மணி அளவில் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் கோவை காந்தி பார்க் – தடாகம் ரோடு சந்திப்பு அருகில் வந்த Tata Ace நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, தலா 25 கிலோ எடை உள்ள 30 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 750 கிலோ பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெபேஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர், மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.