தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு பல மணி நேரங்கள் கடக்கும் நிலையில், பழமை வாய்ந்த மேம்பாலங்களில் ஒன்று வடகோவை மேம்பாலம்.
இந்த மேம்பாலத்தில் இருந்து சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல இரு சக்கர மற்றும் ஆட்டோக்கள் மட்டும் பயன்படுத்தபட்டு வரும் மேம்பாலம் கீழ்பகுதியில் சுரங்க பாதைகளும் உள்ளது.
இந்நிலையில் சென்ட்ரல் திரையரங்கில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் போது உள்ள ஒரு பாதையில் வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், மேலும் மது பிரியர்கள் மது பாட்டில்களை அந்த சாலையில் விட்டு செல்வதும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் கோவையில் பிரதான மேம்பால சாலை மோசமாக அவல நிலையில் உள்ளது. மேலும் மோசமான சாலையாக மாறி வரும் அந்த சாலையை தூய்மைப்படுத்தி பராமரித்து வந்தால் மட்டுமே இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.