தமிழகம்

கர்ப்பிணி பேராசிரியை மரண வழக்கில் திருப்பம்.. சாட்சியாக வந்த 4 வயது மகன்!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் பிரவீன்குமார்(35). நாசரேத்தை சேர்ந்த ஜெபஸ்டின் சாமுவேல் மகள் ஷெர்லின் கோல்டா(35).

இவர்கள் இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு டிஜோ வின்ஸ் என்ற 4 வயது மகன் உள்ளார்.

தம்பதி இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். பேராசிரியர் கோல்டா தற்போது ஐந்து மாத கர்ப்ப்பிணியாக உள்ளார். இதனால் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரவீன்குமார் குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் கோல்டா வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையும் படியுங்க: சினிமா பாணியில் காதலன் திருமணத்தை நிறுத்த வந்த பெண்… சர்ச்சில் பரபரப்பு!

அவரை பார்த்த குடும்பத்தினருடன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோல்டா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேராசிரியர் கோல்டாவின் தந்தை ஜெபஸ்டின் சாமுவேல் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஜெபசிங் சாமுவேலிடம் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விசாரணை நடத்தினர்.

அப்போது தாயை இழந்த நான்கு வயது குழந்தையான டிஜோ வின்ஸ் தனது தாய் கோல்டாவை தனது தந்தை அடித்து விட்டதால் இறந்து போனார் என மழலை மொழியில் பேசினார்.

இந்த காட்சியை உறவினர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தாய் மர்மமாக இறந்த நிலையில் அவரது நான்கு வயது மகன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!

படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…

2 hours ago

விஜய் படத்துக்கு 150 டைட்டிலா..அந்த ஒரு பாட்டுனால தப்பிச்சேன்..வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!

'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…

3 hours ago

ரஜினிக்காக எடுத்த முடிவு…SK 23 படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்னனு தெரியுமா.!

ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…

4 hours ago

get out stalin என்று சொல்ல மக்கள் தயார் : ஒன்று சேர்ந்தால் வெற்றி.. பிரபல நடிகை கருத்து!

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…

4 hours ago

அட்லீயை அடித்து விரட்டும் பாலிவுட்? கமிட் ஆன படத்தில் இருந்து கழட்டி விட்ட சூப்பர் ஸ்டார்!

இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…

4 hours ago

மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!

சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…

5 hours ago

This website uses cookies.