தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் பிரவீன்குமார்(35). நாசரேத்தை சேர்ந்த ஜெபஸ்டின் சாமுவேல் மகள் ஷெர்லின் கோல்டா(35).
இவர்கள் இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு டிஜோ வின்ஸ் என்ற 4 வயது மகன் உள்ளார்.
தம்பதி இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். பேராசிரியர் கோல்டா தற்போது ஐந்து மாத கர்ப்ப்பிணியாக உள்ளார். இதனால் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரவீன்குமார் குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் கோல்டா வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையும் படியுங்க: சினிமா பாணியில் காதலன் திருமணத்தை நிறுத்த வந்த பெண்… சர்ச்சில் பரபரப்பு!
அவரை பார்த்த குடும்பத்தினருடன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோல்டா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேராசிரியர் கோல்டாவின் தந்தை ஜெபஸ்டின் சாமுவேல் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஜெபசிங் சாமுவேலிடம் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விசாரணை நடத்தினர்.
அப்போது தாயை இழந்த நான்கு வயது குழந்தையான டிஜோ வின்ஸ் தனது தாய் கோல்டாவை தனது தந்தை அடித்து விட்டதால் இறந்து போனார் என மழலை மொழியில் பேசினார்.
இந்த காட்சியை உறவினர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தாய் மர்மமாக இறந்த நிலையில் அவரது நான்கு வயது மகன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.